Wednesday, June 16, 2010

காவியக் காதல்

நினைவுகள் முதலாகி
கனவுகள் செலவாகி
கவலைகள் வரவாகி
கண்ணீரில் முடிவாகி
கவிகளில் கருவாகி
காவியத்தில் உருவாகி
நெஞ்சங்களில் இடம்மாறி
நேசத்தின் பொருளாகி
தேசத்தின் புகழ் காக்கும்
காலத்தை வென்ற
காவியக் காதல்

8 comments:

  1. வணக்கம் தோழி
    முதல் முறையாக உங்கள் பக்கம் வருகிறேன் ஒவ்வொரு கவிதையும் பல அர்த்தங்களை உள்ளடக்கி மிக சிறப்பாக கொடுத்துள்ளீர்கள் தோழி அனைத்தும் படித்துவிட்டேன் இனி தாங்கள் விரைவில் தொடரவேண்டும் ..............

    அன்புடன்
    தினேஷ்

    http://marumlogam.blogspot.com

    ReplyDelete
  2. ஒரு சின்ன விண்ணப்பம் word verification எடுத்துவிட்டால் நல்லது

    ReplyDelete
  3. உங்க profilல போட்டோ யாருடையது தோழி ரொம்ப பிடித்திருக்கு

    ReplyDelete
  4. காவிய காதல் அருமை...

    ReplyDelete
  5. என் தங்கையின் படம் தான் தினேஷ். இவை என் ஆக்கங்கள் அல்ல. எனது சித்தியின் ஆக்கங்கள். அவரின் கவிதைத் தொகுப்பிலிருந்து போட்டுக்கொண்டிருக்கிறேன். நன்றி உங்கள் வருகைக்கு

    ReplyDelete
  6. நன்றி கௌசல்யா. உங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறேன். உங்கள் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  7. இப்போதைக்கு இந்த கவிதை மட்டும் தான் நான் படித்தேன் , கவித்துவமாக இருக்கு. கொஞ்சம் எதார்த்தமான கவிதைகளையும் உங்களிடம் இருந்து எதிர் பார்க்கிறேன் . நன்றி அருந்ததி.
    அன்புடன்,
    ராக்ஸ் . . .

    ReplyDelete