Sunday, June 6, 2010

” மனிதம்” எங்கே

சோகங்கள் தாங்கி வரும்
மேகங்கள் தரும்
சேதி தான் என்ன?
மானிடனே
உன்
மௌனத்தின்
முடிவு தான் என்ன?
விடிலுக்காய் காத்திருந்து
வெள்ளிகளை எண்ணுவதில்
வெற்றி சாத்தியமோ….?
உன் மனவீணை
தடுமாறும்
நிலை மாற வேண்டும்
புயல் கூட உனக்காக
தணிந்தாக வேண்டும்
மானிடனே
உறவுகளைத் தொலைத்து
உடமைகளை இழந்து – நீ
எதைத் தான் தேடுகிறாய்?

மனிதம் தொலைந்து விட்டதாக
தேடுகின்றாயா?
அதோ
கிழக்குப் பறவையொன்று
கீழ் வானில் பறக்கிறது
வெண்புறாவே தான்!
நீ
விடியலின் போது
விசாரித்துப் பார்
”மனிதம்” எங்கே? என்று

No comments:

Post a Comment